கன்னக் கதுப்பில்
மின்னல் பட்டுத் தெறிக்க,
கருவிழியில் மையெழுதி
என் மனதினைத் துளைக்க,
கனியிதழில் தேன் தடவி
புதுக் கவிதை படிக்க,
வழித்தெடுத்த கருங்கூந்தலில்
வெண்மலர்கள் சூடி,
முகமெங்கும் மனமகிழ்வைப்
பறை சாற்ற
என் கரம் பற்ற வந்த உந்தன்
வாழ்வினிக்கச் செய்வேனடி!
No comments:
Post a Comment