அதிகாலை எனை யெழுப்ப
அழைத்துப் பார்த்தாய்,
அசைத்துப் பார்த்தாய்,
அணைத்துப் பார்த்தாயா?
நீ முன்னே நீராடி
நெடுங்கூந்தல் மலர்தறித்து
கன்னங்கள் மேடேற
கனியிதழில் நகைச் சூடி,
விற்புருவ நாணேற்றி
விழியம்பு சரம் தொடுத்து
முத்துப்பல் கடை விரித்து
புதுவடிவம் கொண்டாயோ?
இதழ்தேனை வடித்தெடுத்து
என்மேல் நீ தூவிடடி,
என் நாளை இனிதாக்க
என் வாழ்வில் கலந்தவள் நீ!
அழைத்துப் பார்த்தாய்,
அசைத்துப் பார்த்தாய்,
அணைத்துப் பார்த்தாயா?
நீ முன்னே நீராடி
நெடுங்கூந்தல் மலர்தறித்து
கன்னங்கள் மேடேற
கனியிதழில் நகைச் சூடி,
விற்புருவ நாணேற்றி
விழியம்பு சரம் தொடுத்து
முத்துப்பல் கடை விரித்து
புதுவடிவம் கொண்டாயோ?
இதழ்தேனை வடித்தெடுத்து
என்மேல் நீ தூவிடடி,
என் நாளை இனிதாக்க
என் வாழ்வில் கலந்தவள் நீ!
No comments:
Post a Comment