Tuesday 4 June 2013

புதுமை பெறட்டும்

ஆற்றங்கரையில் ஆழ்ந்து படிக்கும்
அன்புச் சிறுவனே!
சற்றே கண்ணைத் திற!
புத்தகப் புழுவாய் மாறாதே!
உன்னைச் சுற்றி
உன்னத சூழல்,
வண்ணங்களின் தெளிப்பு,
இயற்கையின் வனப்பு,
சுகந்த சுதந்திர வாசம்,
இவற்றை முதலில் படி!
உன்னுள் உன்னைப் பிடி!
கற்றதைக் கக்கும் வித்தை
உனக்கு வேண்டாம்!
உன்னைக் கொண்டு இவ்வுலகம்
கற்க வேண்டியது
ஓராயிரம் உள்ளது,
அவற்றை முதலில் கண்டு பிடி!
கேள்!
கேள்!
நீ கேட்கத் தொடங்கினால்
அந்த இறைவனும் பதிலளிப்பான்!
எழுந்து வா அன்பனே!
உன்னால் இவ்வுலகம்
புதுமை பெறட்டும்!

No comments:

Post a Comment