சாலையில் நடக்கும்போதும்
சந்தையை கடக்கும்போதும்
தொட்டுப் பார்க்கத் தோணுது
குதித்தோடும்
சுட்டிக் குழந்தைகளை,
வீட்டிற்கு வரும்
விருந்தாளியின் குழந்தைகளின்
விருப்பங்களை
மனப்பாடம் செய்கிறது மனது.
நண்பனின் வீட்டிற்க்கு
செல்லும்போதெல்லாம்
அவன் குழந்தையின்
முகம் முதலில்
நிழலாடி
கடையில் சென்று
கண்டதை வாங்கிக் கொண்டு
விரையத் துடிக்குது
இதயம்.
வீடு முழுக்க
வரும் குழந்தைக்கு வேண்டி
வாங்கிக் குவிக்கும் அவள்.
எல்லாம் சரி,
மகிழ்வெல்லாம்
எவரேனும்
எப்போ உன் குழந்தையெனக்
கேட்கும் வரைதான்!
No comments:
Post a Comment