Thursday 1 August 2013

வேலை



அதிகாலை எழுந்து
வீட்டின்
வேலைகளை முடித்து
அவசரமாய் கிளம்பி
அலுவலகம் சென்று
அலுவல்களை முடித்து
வீடு திரும்பும்போது
அப்பாடா
என்றிருக்கும்.
ஆனால்,
இரவு வரை வீட்டில்
எத்தனையோ வேலை.
அலுவலகம் சென்றால்
அங்கே பல பேய்கள்,
வீட்டிற்க்கு வந்தால்
இங்கே பல நோய்கள்.
வேலைப்பளு குறைக்க
வேலைக்காரி வைத்தால்
கணவன்
கயவனாவான்.
பேரனைப் பார்க்க
பெரியவர்கள் என்றால்
பெருஞ்சுமையென நினைத்து
வசைபாடி வருவார்.
பெண்ணொருத்தி அவள்
என்னதான் செய்வாள்?
வேலைக்குப் போய்
வருமானம் தரணும்.
வீட்டிலே வேலை
அவள்தான் செய்யணும்.
தன் பெற்றோருக்கு
தம்பிடிக் காசு...?
நாய்களுக்கும்
பேய்களுக்கும் நடுவில்
அவள் நைந்துதான் போவாள்.
(பி.கு) என் நண்பரின் வீட்டு நிலை இது.
எல்லோரையும் குறிப்பதல்ல)

No comments:

Post a Comment