Sunday 20 October 2013

மாற்றம்



















ஒவ்வொரு நாளும்
புதிதாய் பூத்துக்குலுங்கும்
பூக்குவியலின் வாசமாய்,
குளிர்காற்றின் மென்மையாய்,
இதமான காலையாய்,
எழில் கோர்த்த வானமாய்,
இசையென்னும் கானமாய்,
என் உயிர் மூச்சோடு
இழைந்தோடுமுன்
இனிய நினைவுகளாய்த்தான்
மலர்கிறது.

ஒவ்வொரு துளியாய்
நேரம் நகர,
சுய நல புழுக்களுடனும்,
சுமையான பொழுதுகளுடனும்,
விதியென்னும் செயல்களுடனும்,
உன் நிழலற்ற வெறுமைகளுடனும்
கழிவதால்,

இறுதியில்,
எத்தனைதான் முயன்றாலும்,
இனிய குடும்பத்தினகத்து நுழைந்தாலும்,
இன்பத்தை தொலைத்த
ஏக்கத்தை பெறுக்கிய
இருண்ட நாளாகவே முடிகிறது.

இன்றேனும்
ஒரு மாற்றம் காண இயலுமா?

1 comment:

  1. ஏக்கத்தின் சுவடுகள்

    ReplyDelete