Sunday 22 December 2013

எப்படி நான் எழுத?

உல்லாசப் பறவையாய்
ஊர் சுற்றித் திரிந்த என்னை
ஓரிடத்தில்
உட்கார வைத்து
எழுத்தாணியை
கையில் கொடுத்தாய்.
எல்லாம் சரி,
என்னிதயத்தை
எடுத்து சென்றாயே,
இனி
எப்படி நான் எழுத?

No comments:

Post a Comment