முகமுல்லைப்பூ விகசித்து என்னுள்
மகிழ்விதைகளைத் தூவாதோ?
குளிர்தென்றலைச் சுமந்து காதல்
தேனம்புகளை உள்ளில் வீசாதோ?
ஓரவிழியால் உயிர்கவ்வி உணர்வுகளில்
சிநேகத் தீயாய் பரவாதோ?
பாரங்களைச் சுமந்த
பாத நழுவல் பயணங்களில்
விரல் பாலமிட விரைந்து வாராதோ?
வாழ்வின் சுவைக் கூட்டி
வெண்ணிலவின் தண்ணொளியாய்
விரசங்களைக் கடந்த காதல்
வரமென்று சொல்லித் தாராதோ?
நொடித்தபடி எனைக் கடந்த
நிமிடங்களின் காவியத்தை
மீண்டும் வாசிக்கத் தாராதோ?
ஏங்கித் தவிக்கும் மனதில்
இன்பத் தேன் தமிழெடுத்து
தூய அன்பின் பொருளைக் கூறாதோ?
அன்பெனும் ஆழ்கடல் தவிர்த்து
அலையடித்து ஒதுங்கிய
சிறு படகின் விளிம்பில் நான்..!
மகிழ்விதைகளைத் தூவாதோ?
குளிர்தென்றலைச் சுமந்து காதல்
தேனம்புகளை உள்ளில் வீசாதோ?
ஓரவிழியால் உயிர்கவ்வி உணர்வுகளில்
சிநேகத் தீயாய் பரவாதோ?
பாரங்களைச் சுமந்த
பாத நழுவல் பயணங்களில்
விரல் பாலமிட விரைந்து வாராதோ?
வாழ்வின் சுவைக் கூட்டி
வெண்ணிலவின் தண்ணொளியாய்
விரசங்களைக் கடந்த காதல்
வரமென்று சொல்லித் தாராதோ?
நொடித்தபடி எனைக் கடந்த
நிமிடங்களின் காவியத்தை
மீண்டும் வாசிக்கத் தாராதோ?
ஏங்கித் தவிக்கும் மனதில்
இன்பத் தேன் தமிழெடுத்து
தூய அன்பின் பொருளைக் கூறாதோ?
அன்பெனும் ஆழ்கடல் தவிர்த்து
அலையடித்து ஒதுங்கிய
சிறு படகின் விளிம்பில் நான்..!
No comments:
Post a Comment