Sunday 22 December 2013

தனித்து வாழ்தல் இனிதாய்..

















என்னுடன் நீ 
பேசாமல் போன நிமிடங்களை 
நான் வகுத்தெடுக்க,
அணுவைப் பிளந்த
ஆற்றலாய்,
பிரளய பேரலையாய்
மனமுழுக்க வீசியதை
ஒருங்கிணைத்து
உள் நெஞ்சக் கனவுகளை
உயிர்ப்பிக்க முயல,
வாழ்க்கையின் தனிமையை
ஒளி வெள்ளமாக்கி
முன்னேறச் செய்கிறது!
தனித்து வாழ்தல் இனிதாய்..

No comments:

Post a Comment