Monday, 30 December 2013

நம் காதல்















தென்றலை சூடிய அந்திமாலை,
தென்னஞ்சோலையை சூடிய நிலா,
அருந்த தேநீர் தந்த உன்னை
அருகினிலிழுத்து
நெஞ்சோடரவணைத்து,
பளிங்கினில் முகமிழைத்து,
தரையினில் தவழ்ந்தேன்.

ஓலைகள் விலக்கி
ஒளிமழைபொழிந்த நிலவைக்காட்டி
அழகே உன்போலென்றேன்.
இல்லை, எனைவிட என்றாய்,
மறுதலித்தேன்.
உனைவிட இவ்வுலகில்
உயர்ந்த அழகில்
ஒன்றுமில்லையடி என்றேன்.

முகம் மலர்ந்து,
முறுவலித்து,
இதழ் சுழித்து,
என்னுளிணைந்து சொன்னாய்.
“நம் காதல்” எனைவிட அழகென்று!

No comments:

Post a Comment