மையிருட்டில் மிதந்த மூச்சு,
மார்பிழைந்து உதிரும் ஓசை,
தெளிவாய், தீர்க்கமாய்,
தேகமெங்கும் கவலைக் கோடுகள்,
கோரைப் பாய் விரித்த ஒற்றைத் திண்ணையில்
வாழ்வின் சுமைகளை இன்னும் சுமந்தபடி,
அருகில் வந்து மூக்கிடித்த எலியை,
கைத்தடியெடுத்து
விரட்ட நினைத்து கை ஓங்க,
எழாத கைகளை நொந்து,
மீண்டும் இருமத் தொடங்கினார்,
எலி பயந்தோடியது!
மிகவும் சிறப்பான பகிர்வு தோழனே.. வாழ்க்கையின் நிதர்சனத்தை கண்முன்னே காட்சியாய்க் கொணர்ந்தது நின் எழுத்துகள்..வாழ்த்துகள்..
ReplyDelete