Sunday 8 December 2013

உலர்ந்த கனவு



பட்டுப்போன இலையை
உயிர்ப்பிக்கும் முயற்ச்சியில்
இலைமேல் தவழும்
மழை நீர் துளிகள்,
வீணென்று தெரிந்ததும்
வீழ்ந்துணவாகின
பசித்திருக்கும் புற்களுக்கு!

வாழ்வை உயிர்ப்பிக்கும்
உன்னத முயற்சியில்
தொடங்கும் கனவுகளோ
பல சமயங்களில்
ஊருக்கோ, உறவுக்கோ
உதவியின்றி
உலர்ந்தே போகின்றன!

No comments:

Post a Comment