பட்டுப்போன இலையை
உயிர்ப்பிக்கும் முயற்ச்சியில்
இலைமேல் தவழும்
மழை நீர் துளிகள்,
வீணென்று தெரிந்ததும்
வீழ்ந்துணவாகின
பசித்திருக்கும் புற்களுக்கு!
வாழ்வை உயிர்ப்பிக்கும்
உன்னத முயற்சியில்
தொடங்கும் கனவுகளோ
பல சமயங்களில்
ஊருக்கோ, உறவுக்கோ
உதவியின்றி
உலர்ந்தே போகின்றன!
No comments:
Post a Comment