சோகமழி!
தளிரான விரல் கொண்டு
கோர்க்காதே வினவொன்று,
துடிக்கின்ற இதழ்
விண்டு
தெளிவாக மொழியிங்கு.
உடையுந்தன் உடையல்ல,
உணர்த்துகிறாய் உனை
மெல்ல,
நடையில்லா நிலை
கொண்டு
நயப்பதென்ன பொன்
நிலவே?
அதிகாலைக் குளிரோடு
நீராடி,
குழலாடி,
புதிரான முகம் நீக்கி
விடை தந்து சோகமழி!
No comments:
Post a Comment