Tuesday 10 December 2013

நன்நாள்

முன்னிட்ட பின்னலதன்
பின்னிட்ட மல்லிகையும்
வெண்பட்டு கன்னமதில்
தென்பட்ட என்னிதழும்

தேன் சிட்டு குவியதரக்
கற்கண்டு மாதுளையும்
வில்கொண்டு என்மனதில்
துளையிட்ட கருவிழியும்

பொன்னொளிரும் விரல் நகமும்
மென்விரலும் மோகம் தரும்
சந்தன செம் மேனியெழில்
கொண்ட வளர் சோலையவள்

கார்முகில்காண் தோகையென
நான் தழுவ பூத்து விரல்
கோர்த்து தலை சாய்த்து மடி
சாய்த்திடும் நாள் நன் நாளே!

No comments:

Post a Comment