முன்னிட்ட பின்னலதன்
பின்னிட்ட மல்லிகையும்
வெண்பட்டு கன்னமதில்
தென்பட்ட என்னிதழும்
தேன் சிட்டு குவியதரக்
கற்கண்டு மாதுளையும்
வில்கொண்டு என்மனதில்
துளையிட்ட கருவிழியும்
பொன்னொளிரும் விரல் நகமும்
மென்விரலும் மோகம் தரும்
சந்தன செம் மேனியெழில்
கொண்ட வளர் சோலையவள்
கார்முகில்காண் தோகையென
நான் தழுவ பூத்து விரல்
கோர்த்து தலை சாய்த்து மடி
சாய்த்திடும் நாள் நன் நாளே!
பின்னிட்ட மல்லிகையும்
வெண்பட்டு கன்னமதில்
தென்பட்ட என்னிதழும்
தேன் சிட்டு குவியதரக்
கற்கண்டு மாதுளையும்
வில்கொண்டு என்மனதில்
துளையிட்ட கருவிழியும்
பொன்னொளிரும் விரல் நகமும்
மென்விரலும் மோகம் தரும்
சந்தன செம் மேனியெழில்
கொண்ட வளர் சோலையவள்
கார்முகில்காண் தோகையென
நான் தழுவ பூத்து விரல்
கோர்த்து தலை சாய்த்து மடி
சாய்த்திடும் நாள் நன் நாளே!
No comments:
Post a Comment