Friday 6 December 2013

இப்போதே
















மாற்றங்கள் ஒன்றே வாழ்வின் நியதி,
மாறுதல் என்றும் யார்க்கும் எளிதே!



வறுமையில் மாற்றம்,
வளர்ச்சியில்லா
வாழ்க்கையில் மாற்றம்,
சிந்தனை மாற்றம்,
சிதைந்த தலைமையில் மாற்றம்,

ஆட்டு மந்தையாய்
வாழ்வதில் மாற்றம்,
கூட்டம் பார்த்து
குவிவதில் மாற்றம்!
நோட்டைப் பார்த்து
சாய்வதில் மாற்றம்!

இன்னும் இதுபோல்
எத்தனையெத்தனை மாற்றங்கள்
மாறாமலே!

என்றேனும் இந்நிலை
மாறிடல் வேண்டின்
இப்போதே நாம்
இயங்கிடல் வேண்டும்!

எத்தர்களும்,
பித்தர்களும்
இயங்கும் பட்டறையாய்
அரசியல் சாக்கடை
அசுத்தமாகிக் கிடக்கிறது!

அசூயைக் கொண்டு
விலகிப் போகாது
நல்ல நீர் கொண்டு
நம் நாடு துலக்கி
நல்ல மாற்றங்கள் வர
நாமன்றோ விழைய வேண்டும்!

No comments:

Post a Comment