Sunday 15 December 2013

எப்படி சொன்னார்?

ராஜீ தனது அறையில் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருந்தாள். திடீரென்று உரத்த குரலில், “அம்மா” என்று அழைத்தாள். அடுப்படியில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த மனோரஞ்சிதத்திற்கு கேட்கவே, “என்னம்மா ராஜீ?” என்று குரல் கொடுத்தார்.
“அம்மா, நான் இந்த டிரஸ்ஸ போட்டுக்கலாமானு வந்து பார்த்து சொல்லு” என ராஜீ கூவினாள். அவளது தாய், உடனே, “வேண்டாம்மா” என்று பதிலுரைத்தாள்.
ராஜீக்கு திகைப்பு. என்ன இது? நான் எந்த உடுப்பை சொல்கிறேன் என்று கூடத் தெரியாது. பார்க்காமலே வேண்டாமென்று கூருகிறாளே என்று ஆதங்கப்பட்டு, “அம்மா, என்ன விளையாடுறிங்களா? நான் எந்த டிரஸ்ஸ சொல்றேன்னுகூட தெரியாம எப்படி வேணாமுன்னு சொல்றிங்க?” என்று இரைந்தாள்.
அதற்கு அந்த தாய் என்ன சொல்லி இருப்பார்?

No comments:

Post a Comment