Monday 30 December 2013

வந்திணைவாள்



நுதலில் விழுந்த ஓரிழையை விலக்கி
நெளியுமிரு புருவமதை உயர்த்தி,
இதழ் வழிய புன்னகையை புகுத்தி
இயம்பினள் தன் கருவிழியை நகர்த்தி!

வண்டுகளை ஒளி மழையில் பொருத்தி
வெள்ளமென காதலிசை நிகழ்த்தி
பண்டு நிகழ் காமனுரை பரத்தி
வந்திணைவாள் என்னுயிரை மலர்த்தி!

No comments:

Post a Comment