Friday 6 December 2013

வாழி


கனவினில் கண்ட பூமுகம் நாண
கண்ணிமை தன்னில் என்னிலை காண
மனதினில் அன்பின் நாட்டிய மாட,
மங்கையுன் நாளில் பாடினேன் வாழி!

தோகையி லாடும் பூச்சர முந்தன்
தோள்களி லேறி யென்கரம் பட்டு
வாகையென் றெந்தன் தோள்களில் தாவி,
வாழ்ந்திட காதல் சொன்னவள் வாழி!

நாளொறு நாணம் நங்கையுன் வண்ணம்
நாவினில் மௌனத் தென்றலே கொஞ்சும்,
மாசறு பொய்கை கொண்டவள் நெஞ்சம்
மன்னவர் போற்ற மலர்ந்திட வாழி!

No comments:

Post a Comment