Wednesday 18 December 2013

பயணம்
















மரபுகளின் வரம்புகளை மீறி பயணிக்க
விளிம்புகளை நெருங்கியதும்,
விலங்கிட்டோர் விளி கேட்டு
விக்கித்து வளைந்ததென் பாதை.
பயண திசை மாறி
மீண்டும் மீண்டும்
தொடங்கிய இடத்திலென்
தழும்புகளைத் தொட்டுத் தழுவியபடி,
உள்ளத்துச் சூட்டில்
குளிர்காய்வதாய் எண்ணி
நடுங்கியபடி உறங்குகிறேன்

No comments:

Post a Comment