Wednesday 18 December 2013

வெளிச்ச சுவாசம்

வலிந்து அடைக்கப்பட்ட இரவுகளின்
சிறை பிடிக்கப்பட்ட பொழுதுகள்,
இரவல் தர வழியுமின்றி,
உதிரும் கனவுகளை
உள்ளத்துக்குள் தெளித்தபடி,
உறங்கிப் போவதாய்
பாவனை செய்தபடி,
பயணிக்கின்றன...!
விடியும் பொழுதுகளேனும்
வெளிச்ச சுவாசத்தை
மீட்டுத் தருமா?

No comments:

Post a Comment