Monday 30 December 2013

“அம்மானா சும்மா இல்லடா!”

அனிலின் அம்மா சென்னையில் வீடெடுத்து வசித்துக் கொண்டிருக்கும் தனது மகனைக் காண சென்னை வந்திறங்கினார். அனில் அம்மாவை பஸ் ஸ்டாண்டில் எதிர் கொண்டழைத்து காரில் ஏற்றி வீடடையும் முன்பே எச்சில் கூட்டி விழுங்கி எப்படியோ மகதாவும் தன்னோடு வீட்டில் குடியிருப்பதை சொல்லி விட்டான்.
மகதாவும் தானும் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பதாகச் சொன்ன அனில், மகதா கோழிக்கோடிலிருந்து இங்கு வந்து வீடில்லாமல் அலைந்த்தால் தான் தனது வீட்டில் தனியே இருப்பதற்குத் துணையாகவும், வீட்டின் வாடகையில் பங்கெடுக்கும் தோழியாகவும் இருப்பதற்காக குடி வைத்த்தாகக் கூறி மகதாவை அம்மாவிற்கு அறிமுகப் படுத்தினான்.
மகதாவும் அழகுதான். அனிலின் அம்மாவிடம் அவ்வளவு அன்பாகவும், மரியாதையாகவும் பழகினாள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக வந்த அனிலின் அம்மாவிற்கு மகதாவைப் பிடித்துப்போக, அனிலிடம், “ஏய், அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருக்குடா, அதையே உனக்கு பேசிடலாமா?” என்று வினவினாள்.
அனில், “அய்யோ அம்மா, நாங்கள் அவ்வாறு பழகவில்லை” என்று கூறி அம்மாவின் வாயை அடைத்து விட்டான்.
இரு படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில், அம்மாவும், மகதாவும் ஒரு அறையிலும், அனில் ஒரு அறையிலும் படுத்து உறங்கினர்.
திங்கட்கிழமை காலை அனிலின் அம்மா ஊருக்கு கிளம்ப, அனில் அழைத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு அப்படியே வேலைக்குப் போய்விட்டான்.
மாலை வீட்டிற்கு வந்து அவனும் மகதாவும் வெளியில் சென்று உணவருந்திவிட்டு வரும்போது, அனில் மகதாவிடம் அம்மா கூறியதை சொல்லி, இன்னும் சமயம் வரட்டும், அனுமதி பெறலாமெனக் கூறினான்.
செவ்வாய்கிழமை மாலை வீட்டிற்கு வந்தபோது மகதா பரபரப்பாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள். என்னவென்று கேட்ட்தற்கு, தனது வெள்ளித்தட்டை இரு நாட்களாக்க் காணவில்லையென கூறினாள்.
இருவரும் வீடு முழுக்க தேடி பார்த்த பின்னர் மகதா அனிலிடம், “நான் சொல்வதை தவறாக நினைக்காதே, எதற்கும் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேள். அவர் மறந்துபோய் எங்கும் எடுத்து வைத்திருக்கலாம். அல்லது யாருக்கேனும் எடுத்துக் கொடுத்திருக்கலாம்” எனக் கூற, தயக்கத்துடன் அலைபேசியெடுத்து அம்மாவை அழைத்து, வெள்ளித்தட்டைக் காணவில்லை எனக் கூறியதுமே அம்மா சிரித்துக் கொண்டே, “நீங்கள் இருவரும் அடுத்த முகூர்த்த்தில் திருமணம் செய்யவேண்டும். போய் மகதாவின் அறையில், அவளின் படுக்கை விரிப்பின் கீழ் படுக்கையில் பார்” எனக் கூறி வைத்துவிட்டார்.
“அம்மானா சும்மா இல்லடா!”

No comments:

Post a Comment