Sunday 22 December 2013

அன்னச்சிறகே

வெண்ணிற நீரோடையில்
கருமுத்து உருண்டோட
கனியே உன் இதழங்கு
எனை மூழ்கச் செய்யுதடி.

அரும்பாத முல்லைப்பூ
அவிழ்ந்தாட மகிழ்ந்தாடி
கரும்பான நாசியிதழ்
கவிசொல்லி விரியுதடி.

வாள்கொண்டு விளையாட
விழி மேலே புருவங்கள்
நீள் நெற்றி பளிங்காக
நிலைத்தன்மை கொண்டதடி.

கன்னத்தின் செழுமையிலென்
கனவெல்லாம் மின்னுதலில்
அன்னச்சிறகே யென் 
அனல் போக்க வருவாயா?

No comments:

Post a Comment