அறியாத விதையாய் நான்
அறியாமல் விதைத்தவர் யார்?
புரியாத வாழ்விலென்னை
புதிராகப் புதைத்தவர் யார்?
சரியான விடைகள் தேடி
தடுமாறும் எனது நடை,
விடை தேடும் கேள்விகள் கூட
வெறுப்பாகிப் போகும் நிலை.
தாயென்றும், தந்தையென்றும்,
தனயனென்றும், உறவு என்றும்
தனியாக இல்லாமல்
துணையாகி இருந்தாலும்
உளம் தேடும் கேள்விக்கு
விடையறிந்தோர் எவருமிலை.
தொடங்கிய பயணமதை
தொடங்கியதால் முடித்திடுவோம்.
முடியும்வரை தெரியாது,
முடியும்போதும் புரியாது.
புதிரான கேள்வியுடன்
தடுமாறியபடி தொடர்கிறேன்…!
அறியாமல் விதைத்தவர் யார்?
புரியாத வாழ்விலென்னை
புதிராகப் புதைத்தவர் யார்?
சரியான விடைகள் தேடி
தடுமாறும் எனது நடை,
விடை தேடும் கேள்விகள் கூட
வெறுப்பாகிப் போகும் நிலை.
தாயென்றும், தந்தையென்றும்,
தனயனென்றும், உறவு என்றும்
தனியாக இல்லாமல்
துணையாகி இருந்தாலும்
உளம் தேடும் கேள்விக்கு
விடையறிந்தோர் எவருமிலை.
தொடங்கிய பயணமதை
தொடங்கியதால் முடித்திடுவோம்.
முடியும்வரை தெரியாது,
முடியும்போதும் புரியாது.
புதிரான கேள்வியுடன்
தடுமாறியபடி தொடர்கிறேன்…!
No comments:
Post a Comment