Friday 6 December 2013

குயவனும் குவளையும்















தொட்டவர் கைகளில்
துவண்டது களிமண்,
குவித்ததைக் கொண்டு
ஆரத்தில் வைத்து
சுழற்றியபடி கை
சித்திரம் பேச வைத்தார்.

அற்றதை எடுத்து
அப்புறப்படுத்தி
மற்றதை விரலால்
நீவிடச் செய்ய
வளைவாய்,
நெளிவாய்
அழகாய் விளைந்தது
அங்கொரு குவளை!

இடையிடை விரலால்
நீர் தொட்டு நீவிட
நிறைய கோடுகள்
நெற்றியில், உடலில்,
அணிந்தபடி
அழகுற்றது
அந்த குவளை!

குவளையாய் நானும்,
குயவனாய் தந்தையும்,
நன்றி என் தந்தையே!

No comments:

Post a Comment