எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே,
என்னுள் கலந்திருக்கும் அரும்பொருளே!
உன்னைக் கடவுளென
ஓத சொல்லுகிறார்,
ஊரில் கோவில் கட்டி
எங்கும் தேடுகிறார்.
என்னைப்போல ஒரு
உருவம் உனக்களித்து
எங்கும் உள்ள உனை
எங்கும் தொலைத்து விட்டு,
சிலையாய் உனை இருத்தி
மடமை பூணுகிறார்.
நாதம் உனது ஒலி,
கீதம் உனது மொழி!
காதல் உனது வழி,
கருணை உனது விழி!
யாதும் இல்லாத
யாது மாகி வந்த
உன்னை உணர்வதற்கு
உண்மை அன்பே வழி!
இறைவா!
இது எனது கருத்து,
இதற்க்கும்
உறுதி சொல்ல
என்னால் இயலாது!
இயன்றவரை
என் வழியே
உனை அறிய
என் முயற்சி
என்றும் தொடரும்!
என்னுள் கலந்திருக்கும் அரும்பொருளே!
உன்னைக் கடவுளென
ஓத சொல்லுகிறார்,
ஊரில் கோவில் கட்டி
எங்கும் தேடுகிறார்.
என்னைப்போல ஒரு
உருவம் உனக்களித்து
எங்கும் உள்ள உனை
எங்கும் தொலைத்து விட்டு,
சிலையாய் உனை இருத்தி
மடமை பூணுகிறார்.
நாதம் உனது ஒலி,
கீதம் உனது மொழி!
காதல் உனது வழி,
கருணை உனது விழி!
யாதும் இல்லாத
யாது மாகி வந்த
உன்னை உணர்வதற்கு
உண்மை அன்பே வழி!
இறைவா!
இது எனது கருத்து,
இதற்க்கும்
உறுதி சொல்ல
என்னால் இயலாது!
இயன்றவரை
என் வழியே
உனை அறிய
என் முயற்சி
என்றும் தொடரும்!
No comments:
Post a Comment