Monday 30 December 2013

அந்தரங்கத் தோழி

ஆற்றின் மடியில்
அலங்கோலமாய் விழுந்து,
சுருண்ட கேசங்களிலிருந்து
விழுந்த மலரிதழில்
ஒன்றெடுத்து உற்றுப் பார்த்தபடி,
கடந்த இரவின்
கவிதைகளின் சங்கமத்தில்
காதோரத்தில் கிசுகிசுத்த
அந்தரங்கச் செய்தியை
மறு நாள் வந்து
மீட்டெடுப்பானாவென்று
கேட்டு, பின் கவலையுடன்
களைந்தாளந்த
அந்தரங்கத் தோழி!

No comments:

Post a Comment