Monday, 30 December 2013

ஏற்பாயா?









உனக்குமெனக்குமிடையே
உறுத்தலொன்றுமிலையே,
பின்னெதற்கு
பிரிவென்னும்பாரந்தூக்கி
புதைமணலில் சிக்குண்டேன் நான் !

விட்டுக்கொடுத்தலின்றி நான்
விலகிப்போனேனா?
உன் தாய்மையன்பிடம்
ஈரம்  உறையக்கண்டும்
நான் தூரம் சென்றேனோ,, ??

சாமரம்வீசியுனை
வரவேற்கும்வேளையிலே 
சோம்பலைத்தரித்து நான்
வெந்தணல் புகுந்தேனோ?

உன் வேர்ப்பாதங்களில் வெந்நீர்சிதற
என்கண்ணீர் காரணமானதேனோ ??

அனைத்தும் மாயையென்று
ஆகாயத்தில் பறந்து
சுவாசிக்கவழியின்றி
மூச்சடைத்தவொரு மாலையில்

அன்பு நூலொன்றைத்தரையிறக்கி
நிதர்சனக்காட்சிகளில்
நீந்தச்செய்தவுனைக்காண

என் ஆணவப்பாறைத்தகர்த்து
நட்புத்தென்றலில் நீள்மூச்செடுத்து

உன்மடியுறங்க வருகின்றயெனையேற்பாயா..?

No comments:

Post a Comment