Monday 30 December 2013

பொய்யுலகம்

















பிடிவாதமாய்
பிடித்து இழுத்தாலும்
புறந்தள்ளிப்போகும்
மனமதில் அமிழ்ந்து
தொலையும் வரை!

மறுமுனைக் கயிரை
யாரிடமும் கொடுக்காமல்
ஆசனவாய் அடைத்து
அவதியுற்றாலும்
கசப்பை இனிப்பாய் கருதி
விழுங்கும்!


நிலவறையில் புகுந்து
வியர்க்கும் பொழுதுகளாய்
நிம்மதி இழந்த
நிகழ்வுகளின் விரசங்களை
ருசிக்க ஏங்கி
நித்தமும் துடிக்கும்!


நேரச்சுமைகளை மறந்து,
வாழ்வின் இனிமைகள் துறந்து,
கவலைகளை மறப்பதாய்
பொய்யுலகத்தில் சுழன்று
கவலைகளை சுமக்க
காட்சியொளி பெட்டியினிடத்தில்
கன்னத்தில் கையும்,
கண்களில் நீருமாய்,
கன்னியர் பலரும் குழுமியபடி
என்றும் என்றென்றும்...!

No comments:

Post a Comment