Sunday 8 December 2013

இறைவா











தனியிரவில், அடர் மழையில்
தவித்த என் மனப்படகு,
எழும் நிமிடம் விழுமென அறிந்தும்,
விழும் நொடியே எழுமென உணர்ந்தும்,
விசும்பலுடன் வீழ்வதையே
வெறித்தபடி நினைவுகள்..

துடுப்பெடுத்து துழாவ
துணிவில்லா கரம் கொண்டு,
வருவானோ எனை காக்க,
சேர்ப்பானோ கரையிலெனும்
தொழுகைக்கு மாத்திரமென்
கரங்களின் உபயோகம் சரியோ..!

உன் கரம் கொண்டு எனைப் பற்றி
கரை சேர்க்கும் மாயை வேண்டாம்.
கவிழ்ந்தாலும் படகைக்
கரங்கொண்டு பற்றி
கால் கொண்டு நீரைத் துழாவி,
கரை சேரும் துணிவெனக்கு
தந்தால் போதுமன்றோ
என் இறைவா?

No comments:

Post a Comment