Monday 30 December 2013

வாழ்வியல்

வாழ்வியல்
நேற்று ஒரு பூச்செடிகள் விற்பனை செய்யும் இட்த்திற்குச் சென்றிருந்தேன். ஆயிரக் கணக்கில் பூச்செடிகள் விற்பனைக்கு இருந்தன. எவ்வளவு ஆர்வம் இருந்திருந்தால் இவ்வளவு செடிகளை சேகரித்து ஒரு தாய்போல் பாதுகாத்து விற்பனை செய்துகொண்டிருப்பார்?
ஆனால், தோட்டத்தில் வியாபாரத்திற்காக இல்லாமல் இச்செடிகளை வளர்க்கும்போது இருந்த ஆர்வமும், மகிழ்ச்சியும் இப்போது அவரிடத்தில் இருக்குமா? சந்தேகம்தான்.
வியாபாரமாகிவிட்ட பொழுதுகளில், வருவோரையும், போவோரையும் பார்க்கவும், பணம் வாங்கிக் கொடுத்து, பட்டுவாடா செய்யவுமே அவருக்கு நேரமிருக்கும்.
தன் குழந்தைகள் போல் நேசித்த பூச்செடிகளிடம் கொஞ்ச அவருக்கு இப்போது நேரமிருக்குமா?
வாழ்க்கையும் அப்படித்தானோ?
ரசித்து ருசித்து கழிய வேண்டிய காலங்கள், வரவு செலவு பார்க்கப்பட்டு, வியாபார வாழ்க்கையாகி, பொன்னான நேரத்தை பொருளுக்கும், பகட்டுக்கும் விற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்த வாழ்க்கையை விற்று பெருவது ருசிக்கிறதா?

No comments:

Post a Comment