Thursday 9 May 2013

தேடினேன் உன்னை



இதுவரை நான் முகம் காணா
என்னவளிடமிருந்து
எனக்கு ஓர் அழைப்பு!
மழை தென்றல் கூட வர
இன்னொருத்தி கைபிடித்து
ஆலயத்தில் வலம் வருவேன்
எனை கண்டுணர்வாயென
அருள் புரிந்தாள்.
காணவா? உணரவா?
தேடலில் சுகமா?
தேடப்படுவதில் சுகமா?
எனக்கெல்லாமே அவளாகி தெரிந்ததன்று!
உட்புறத்து சுவரிலினிலே ஒரு கால் உதைத்து
இருகண்ணும் மூடி
என்னிதயத்தினுள்ளிலே தேடலானேன்.
நானறியா அவள் முகம்
என்னிதயத்து அடித்தளத்தில்...
என் செவிகளிலே சலசலப்பு
அவளின் கலகலப்பு!
என் நாசியிலே அவள் மூச்சின் துடிதுடிப்பு!
என் உணர்வெல்லாம் அவளாகி
கண்திறந்தேன்.
தேவதையாய், திருமகளாய்,
குளிர் நிலவாய் புன்னகைத்து
கடைகுட்டி காஞ்சனாவின் கை பிடித்து
என் முன்னே அவள்!

No comments:

Post a Comment