Thursday 9 May 2013

பயணங்கள் எங்கே?



பாலங்கள் பணிந்து விட்டோம்
பயணிக்க யாருமின்றி!
சாலைகள் திறந்து வைத்தோம்
சந்திப்பில் யாருமின்றி!
விரல் விட்டு எண்ணவும்
வக்கற்ற விநாடிகளில்
போருக்கு தயாரானோம்
யாருடன்?
நாணங்கள் இல்லை,
நமக்கு நாம்தான் தொல்லை!
சோகங்கள் செதுக்கி
ஆனந்தம் கொள்ளவே
பாரங்கள் தூக்கி
பள்ளத்தில் எறிந்து விட்டு
பயணிக்க தயாரானேன் நான்,
எங்கோ!

No comments:

Post a Comment