Friday 24 May 2013

உயிரொளி சுடரொளி!

மாறிடும் கதைகளில்
தினமொறு பாத்திரம்,
மாறுவதிலை யென
மயங்கியே நாமிங்கு!
தூறிடும் சாரலில்
துவளுமோ பூச்செடி?
உள்மனத் தேடலில்
உருகுமோ உயிர்கொடி?
இறை நிலை பாதையில்
இன் துயர் ஏற்றிடின்,
கடுங்குளிர், கடு மழை,
சுடுவெப்பம், இவையிலை.
சுற்றிலும் உள்ளவர்
சுவையிலா மாந்தர்தம்
எண்ணங்கள் ஏற்பதில்
எனக்கொரு பிழையிலை!
வேதனை அற்றதாய்
வாழ்விங்கு அமைந்திடும்,
சோதனை மனமதை
சுடரொளி ஆக்குமே!

No comments:

Post a Comment