உன்சேலை மடிப்பினிலே
என்னிதயத்தைச் சொருகாதே!
வட்டமிடும் உன் நினைவால்
உனை வட்டமிட வந்தேன் நான்.
கட்டவிழ்ந்த காளையெனைக்
கண்ணசைவில் கட்டிவிட்டாய்!
உன் நினைவில் கண்ணிமைகள்
உறக்கம் தொலைத்தனால்
வாடிய அனிச்ச மலராய்!
உன் முறுவல் கண்டவுடன்
புதிய இதழ் விரித்து
மலர்ந்து துடிக்குதடி!
ஒரு நொடியும் உனைப் பிரியா
வரம் தருவாயோ?
என்னிதயம் நீயென்று
இதழ் மலராயோ?
என்னுணர்வில் கரம் கோர்த்து
உன்னிதயம் துடிப்பாயோ?
என்னிதயத்தைச் சொருகாதே!
வட்டமிடும் உன் நினைவால்
உனை வட்டமிட வந்தேன் நான்.
கட்டவிழ்ந்த காளையெனைக்
கண்ணசைவில் கட்டிவிட்டாய்!
உன் நினைவில் கண்ணிமைகள்
உறக்கம் தொலைத்தனால்
வாடிய அனிச்ச மலராய்!
உன் முறுவல் கண்டவுடன்
புதிய இதழ் விரித்து
மலர்ந்து துடிக்குதடி!
ஒரு நொடியும் உனைப் பிரியா
வரம் தருவாயோ?
என்னிதயம் நீயென்று
இதழ் மலராயோ?
என்னுணர்வில் கரம் கோர்த்து
உன்னிதயம் துடிப்பாயோ?
No comments:
Post a Comment