காலதேவனின் தூரிகை புறத்தே வரைந்தபடி,
அழகு தேவதை நீயென் னெதிரிலே!
உனக்கெனவே அம்மா தைத்தெடுத்த உடையணிந்து
இரவில் நான் சொன்ன கதைகள் நினைந்தாயோ?
அன்புக் குவியலடி, நீ யென் ஆசை மகளடி1
கன்னக் கதுப்பினிலே என் அதரம் பதித்தபடி
ஆசை முத்தங்கள் அள்ளித் தருவேனடி!
எந்தன் மறுபிறப்பாய் இங்கு உதித்தவளே!
உந்தன் உயர்வாழ்வே எந்தன் எதிர்காலம்!
No comments:
Post a Comment