Sunday 5 May 2013

குடம் எனக்கு



முட்புதரினூடே
பாசி படிந்த படித்துறையில்
பாதம் கவனமாய் பதித்திறங்கி,
தாமரை இலைகளை
தன் மலர் கை கொண்டு தள்ளி
கொண்டு வந்த குடத்தினை
கவிழ்த்திறக்கி நீரெடுத்து
திரும்பி வரும்வேளை
திண்ணையிலே அமர்ந்திருந்த
என்னைக் கண்டாள்.
சாலையோர முள்ளொன்று
பாதம் தைத்தது.
குடம் நழுவி கீழே விழுந்தது,
பதறி ஓடினேன்.
நழுவிய குடம் எனக்கு.
எங்கிருந்தோ நாற்பது பேர்
அவளைச் சுற்றி நலம் விசாரிக்க...

No comments:

Post a Comment