Friday 24 May 2013

உயர் நிலை காதல்

நானென நீயும், நீயென நானும்
நெஞ்சங்கள் இடம் மாறக் காதல்
கொண்டவர் பல கோடி உண்டு,
நமது உணர்வுகள் ஒன்றாகி
உதிரத்தில் கலந்திட,
உயிர் விதை ஆனது காதல்!
உன் விழிப் பார்வையில்
என்னுயிர் காண்பதும்,
என்னுளப் போர்வையில்
நீ குளிர் காய்வதும்,
கனவிலும், நினைவிலும்
ஒருவராய் மாறிட,
கனிந்திட்ட உயர் நிலை
நம் காதல்!

No comments:

Post a Comment