Thursday 9 May 2013

உனைக் காண



என்னுயிராய் நின்றவளே!
உனைக் காண
இரயில் வண்டியில் என் பயணம்,
என் மனமோ வானத்தில்,
விமானத்தில்....
ஊரடங்கு உத்தரவில்
உள்ளூர பீறிடும்
போராட்ட உணர்வாக,
நீயில்லா என் நாட்கள்
வெயிலில் இட்ட சருகாய்,
கொடுங்காற்றில் உலர்ந்த பூவாய்,
எப்படித்தான் கழித்தேனோ இன் நாட்களை,
உன் பாசம் பொங்கும் ஈரம் கொண்ட விழிகளை காண,
உன் நேசம் மிக்க இதயத்தின் ஓசை கேட்க,
ஆசை கொண்டு நீ தரும் ஈர முத்தத்தின்
இன்சுவையை நாடி
ஓடோடி வருகிறேன் என் உயிரே!

No comments:

Post a Comment