Sunday 5 May 2013

என் எண்ணங்கள்

வார்த்தைகளில் வண்ணங்கள் சேர்க்கவா?
என் எண்ணங்களில் வண்ணங்கள் கோர்க்கவா?
எண்ணற்ற வண்ணங்கள் என் எண்ணங்களில்
எப்போதும் உண்டு.
என்னை பற்றி, என் தாயை பற்றி, தந்தையை பற்றி,
உன்னை பற்றி, உன் அன்பை பற்றி, உன் அறிவை பற்றி,
என் நாட்டை பற்றி, எம் மக்களை பற்றி, என் மொழியை பற்றி...
வார்த்தைகளில் வர்ணங்களை இப்போது தான்
கோர்க்க முயற்ச்சிக்கிறேன்.
எத்துணை வர்ணங்கள்?
வார்த்தையோ? எண்ணமோ?
ஆனால், ஏதும் புதிதில்லை.
எல்லாமே இங்கே உள்ளது.
எடுத்தாள்வதிலேதான் புது முயற்சி.
என் கலவை உனக்கு புதுமை.
உன் கலவை எனக்கு புதுமை.
என் கலவை வெளீரென்று...
உன் கலவை பளீரென்று...
ஆனாலும்,
எல்லாமே இங்கே உள்ளது தான்..
எதுவும் புதிதில்லை...


No comments:

Post a Comment