Thursday 16 May 2013

எப்படி அறிந்தாள்?

எனதருமை துணையவள்
எப்படி அறிந்தாள்?
எனக்கின்று பதவி உயர்வு,
யாரிடமும் சொல்லவில்லை.
அவளிடத்தில் முதலில் சொல்ல
இன்சுவைகள் வாங்கிகொண்டு
முன்கதவைத் தட்டினேன்,
எப்படி அறிந்தாள்?
மலர்முகத்தில் புன்முறுவல்,
கண்களிலே ஒளிதீபம்,
உள் நுழைந்த உடன் அணைத்தாள்,
உச்சிதனை முகர்ந்தாள்,
இன்சுவையை என்னிதழ் பதித்தாள்,
அழைத்துச் சென்று இருக்கையிலமர்த்தி
அவள் செய்த இனிப்புகளை ஊட்டினாள்,
எப்படி அறிந்தாளிவள்?
காலையில் அவளிடத்தில்
உயர்வினைக் கோருவேனெனச் சொன்னேன்.
கிடைத்ததையவள் எப்படி அறிந்தாள்?
மேசையிலே ஒரு அட்டை
“என்னன்பே! நீங்கள் தகுதியானவர், வாழ்த்துக்கள்”
எனக்கொன்றும் புரியவில்லை,
எப்படி அறிந்தாளிவள்?
அவளிடமே கேட்பதென முடிவு கொண்டு
அடுக்களையில் அவளிடம் சென்று
அணைத்தபடி கேட்கப் போனேன்,
“என்னன்பே எப்படி நீ அறிந்தாய்?”
அப்போதவள் இடையிறுந்து
ஓரட்டை தவறியது,
எடுத்துப் பார்த்தேன்.
“என்னன்பே! இன்றில்லையேல் நாளை!”

No comments:

Post a Comment