Saturday 25 May 2013

சொர்க்கம்

வாகன நெறிசலற்ற மலைப் பாதை,
எங்கினும் கரும் பச்சை வண்ணக் குவியல்,
காரிருள் மேகங்கள் சூழ்ந்த காற்று,
தூரத்தே மான் கூட்டம் துள்ளியபடி,
எங்கோ ஒரு தூரத்தில் யானையின் பிளிறல்,
கண்மறைவில் காத்து நிற்கும் முயல் குட்டி,
என் கழுத்தில் சிலீரென்ற மழைத் துளிகள்,
மனமெங்கும் பூத்திட்ட இசை மலர்கள்,
மலை யிடுக்கினில் ஒழுகிடும் சுனை நீரில்,
மென் பாதச் சுவடுகளை தாலாட்டு மவள்
இதழ்களிலே வழியு மொரு இள முறுவல்,
ஓரக்கண் பார்வை கொண்டு இதயம் கொய்ய,
இருகரம் நீட்டி அழைத்தேன் நான்,
வேகமாய் வந்தென்னை தழுவிடடி,
இக்கணமே என் வாழ்வின் சொர்க்கமடி!

No comments:

Post a Comment