Thursday 16 May 2013

மீன் பிடிக்கச் சென்றேன்

கரும் பச்சை இலைதொட்டு
குளிர்காற்று தாலாட்ட,
தெளிந்த நீரோடையிலே
தூண்டிலை வீசியவன்
பிடித்த மீன் எத்தனையோ!
என்னவளே உனையெண்ணி
என்னுள்ளம் விம்முதடி,
உன் அண்ணன் பிடிப்பதுபோல்
பெரிய மீன் பிடிப்பதற்கு
என்றுதான் கற்பேனோ?
என்றவனை நீயணைத்து
சொன்னாய்!
என்னன்புக் காதலா நீ
கொண்டு தரும் மீனை நான்
அன்பெனும் தேன் தடவி
அருசுவையாய் ஆக்கித்தர
உன் முயற்சி போதுமடா,
மீனளவு துல்லியமே!

No comments:

Post a Comment