Thursday 16 May 2013

வள்ளி

நீ வள்ளியென்றால்
நான் முருகனன்றோ!
தேனும் தினை மாவும்,
தென்மேற்கு இசைக்காற்றும்,
திகட்டும்படி ஆகலாம்,
உன்னிதழின் புன்முறுவல் முன்...!
கதிரவனோ, கடன் வாங்கி ஒளிரும்
குளிர் நிலவோ,
அன்பு கொண்டு எனை நோக்கும்
உன்னிரு விழிகள் முன்
மண்டியிட்டுப் போகலாம்!
காதல் கொண்டு என் உணர்விலே
கலந்து விட்டாய், இனி
காலம் முழுதும் நாம்
ஒன்றே!

No comments:

Post a Comment