Sunday 26 May 2013

மதயானை மனம்



பகலற்ற இரவு காண்,
இருளற்ற நிலவு காண்,
மொழியற்ற கவிதை காண்,
இறகற்ற பறவை காண்,
சுவையற்ற மதுவை காண்,
சுமையற்ற முதுமை காண்,
வரியற்ற குடியை காண்,
வனப்பற்ற மலரை காண்,
இமையற்ற விழி கொண்டு
இவை கண்ட என் நெஞ்சம்,
மதயானை மனம் தந்த
நினைவுகளை களையேனோ?
வினை பெற்ற வாழ்வினிலே
எனை இழந்து போவேனோ?

No comments:

Post a Comment