கேட்பாறற்ற வேர்பலா
வேர்களிலே சுடு நீரோ?
கார்முகிலாய் கண்விழிகள்
கவலைகளின் விளிம்புகளில்..
நான் படைத்த புதுக்கவிதை
எனக்கு மட்டும் படிப்பதற்க்கு
கூர்வாளின் முனையொடிந்து
சண்டையிட நின்றார்போல்...
பாரம் கொண்ட மனதிற்கு
தோள்கொடுக்கும் தோள்களெங்கே?
ஓரிரவில் பலபறவை
ஊர்விட்டு போனது காண்.
உள்ளத்து வலிகள் மட்டும்
ஆந்தையென நிற்பது ஏன்?
வேர்களிலே சுடு நீரோ?
கார்முகிலாய் கண்விழிகள்
கவலைகளின் விளிம்புகளில்..
நான் படைத்த புதுக்கவிதை
எனக்கு மட்டும் படிப்பதற்க்கு
கூர்வாளின் முனையொடிந்து
சண்டையிட நின்றார்போல்...
பாரம் கொண்ட மனதிற்கு
தோள்கொடுக்கும் தோள்களெங்கே?
ஓரிரவில் பலபறவை
ஊர்விட்டு போனது காண்.
உள்ளத்து வலிகள் மட்டும்
ஆந்தையென நிற்பது ஏன்?
No comments:
Post a Comment