Friday 17 May 2013

சுவையே!

சந்தனம் பூசி
மென்மலராகி
என்னிடம் வந்தாயோ?
கண்ணிமை தொட்டு
காதலின் வரிகள்
எழுதிடச் சொன்னயோ?
மன்மத ராகம்
மனதினில் தோன்ற
மயங்கியே நின்றேன் நான்..
என்னிலே உன்னை
எழில் நதியாக்கி
மலர்ந்த பண்ணாய் நான்..
வஞ்சியே உன்னை
நெஞ்சினில் வைக்க
சுகந்த மலராய் நீ..!
அஞ்சிறை கொண்டு
அகண்ட வானில்
பறந்து வந்தேன் நான்!
நம்மிரு இதயம்
நல்லிணையாக
நெருங்கி ஒன்றாக,
அன்பெனும் தேனில்
அனுதினம் ஊறும்,
பழம் தரும் சுவையாய் நாம்!

No comments:

Post a Comment