மாறாத எண்ணங்கள் தந்தாய்,
வேராக என்னுள் படர்ந்தாய்,
என்னிதய வெடிப்புகளின்
மருந்தாக உனைத் தந்தாய்,
அருந்தவமாய் உனைக் கண்டேன்
ஆசையுடன் எனைத் தந்தேன்,
ஏற்பாயோ? என் மனதைத்
துவர்ப்பென்று வெறுப்பாயோ,
கற்பகமே, உன் நினைவில்
காயங்கள் மாறுதடி,
பொற்சிலையே உன் சொல்லில்
வேதங்கள் தோன்றுதடி1
இப்பிறவி மட்டுமல்ல,
எப்பிறவி என்றாலும்
என் காதல் உணர்வுகளின்
உயிர் மூச்சாய் நீ மட்டும்....!
No comments:
Post a Comment