உத்தமர்கள் உள்ளதனால்
உருள்கிறதோ இவ்வுலகம்?
பூமியெங்கும் கயவர்தம்
பாசறையாய் ஆனதோ?
நல்லதெது, கெட்டதெது,
நீயெனக்கு பகற்வாயா?
எனக்கிதுவே நல்லதென்றேன்,
கெட்டதென அறைந்து விட்டாய்,
இன்றதுவே நல்லதென்றாய்,
கெட்டதென உணர்கின்றேன்,
இப்போது நல்லது பயக்கும்,
நாளையே தீயதாக,
நேற்றைய தீமையது
இன்றோ நன்மையாக
மாறும் இவ்வுலகினிலே
மாறாததெதுவோ?
இறுதியாய் என் கேள்வி,
நான் எங்ஙனம்?
நல்லவனா? கெட்டவனா?
என் மனம் அனுதினமும்
கேட்குமிவ் வினாவிற்கு
என்னிடத்தில் விடையில்லை.
நீயேனும் அறிவாயா?
உருள்கிறதோ இவ்வுலகம்?
பூமியெங்கும் கயவர்தம்
பாசறையாய் ஆனதோ?
நல்லதெது, கெட்டதெது,
நீயெனக்கு பகற்வாயா?
எனக்கிதுவே நல்லதென்றேன்,
கெட்டதென அறைந்து விட்டாய்,
இன்றதுவே நல்லதென்றாய்,
கெட்டதென உணர்கின்றேன்,
இப்போது நல்லது பயக்கும்,
நாளையே தீயதாக,
நேற்றைய தீமையது
இன்றோ நன்மையாக
மாறும் இவ்வுலகினிலே
மாறாததெதுவோ?
இறுதியாய் என் கேள்வி,
நான் எங்ஙனம்?
நல்லவனா? கெட்டவனா?
என் மனம் அனுதினமும்
கேட்குமிவ் வினாவிற்கு
என்னிடத்தில் விடையில்லை.
நீயேனும் அறிவாயா?
No comments:
Post a Comment