Monday 13 May 2013

என் தவிப்பு

கார்மேக நீர்துளிகள்
மழையாகி
மண்வந்து சேர்வது போல்
என் உள்ளத்திலுனை நாடி
ஒரு நொடியில்
ஒரு கோடி நினைவலைகள்
உருவாகும்.
சிதறாமல்
உனை வந்து சேர்வதுதான்
எத்தனையோ?
அப்படியே வந்திருந்தால்
என்னன்பே....!
நீ நானாகி
எப்போதோ எனை வந்து
அடைந்திருப்பாய்.
இப்படி நான்
ஏங்கித் தவிக்க
வேண்டியதில்லையே!

No comments:

Post a Comment