Friday 24 May 2013

கண்விழி கலங்காதே!

மைவிழி துணை நலம் கோறுதோ?
மனமதில் சுமை யது கூடுதோ? உன்
கருவிழி கலங்கிட நேருமோ? என்
கண்களும் குளமென ஆகுமோ?
நீ பெண்ணென உதித்தது தாயிடம்,
ஆனால், பெண்ணாய் மலர்ந்தது என்னிடம்,
காதலால் கசிந்திடும் என் மனம்,
காதலாய் மாறிய துன் மனம்.
எனக்குயிர் நீயென
உனக்குயிர் நானென
மாறிய மனங்களில்
வேதனை வருவதோ?
வேண்டாமடி என்னுயிரே!

No comments:

Post a Comment